முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் சமூக போராளி ச.சு.ஜைனுதீன் பாரதப் பிரதமர் மோடிக்கு கோரிக்கை!
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் சமூக போராளி ச.சு.ஜைனுதீன் பாரதப் பிரதமர் மோடிக்கு கோரிக்கை
சென்னை, மே 17-
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது என முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் சமூக போராளி ச.சு.ஜைனுதீன், தமிழக மக்களின் குரலாக ஒன்றிய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய Rss பாஜக அரசு ஏற்கனவே சிலிண்டர் விலையை உயர்த்தி பாமர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கபட்ட நிலையில் தற்போதும் பாஜக ஒன்றிய அரசு மேலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வியாபாரிகள் தங்களது தினசரி வருமானத்தில் 10% வருமானக் கூலியை இழக்கிறார்கள்.
பெட்ரோல் டீசல் உயர்வு தொடர்பாக முன் அறிக்கை பாராளுமன்றத்தில் ஏதும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா? இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
108 கோடிக்கும் அதிகமான இந்திய குடியுரிமை பெற்றவர்கள் சுதந்திர திருநாட்டில் உங்களுக்கு ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்தார்கள் என்பதால் விலைவாசியை உயர்த்தலாமா?
பாமர மக்களிடம் எரிகின்ற நெருப்பில் கொதிக்கின்ற எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது.
ஒன்றிய பாஜக அரசு மக்கள் நலனுக்காக பாடுபடும் என்று சொல்லித் தான் வாக்குகளை சேகரித்தீர்கள். மக்களுடைய அதுவும் முக்கியமாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட பின் தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை பின்னுக்கு போட்டு அவர்களுடைய வயிற்று எரிச்சலை பெருக்கி வருகிறது பாஜக RSS ஒன்றிய அரசு.
ஈரானில் இந்திய எண்ணை கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக ஏன் இந்திய அரசு மௌனம் காக்கிறது.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
எங்கள் தரப்பில் இதனை கோரிக்கையாக வைக்கிறோம். மீறினால் போராட்டங்கள் வெடிக்கும். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கட்சியாக இதனை நினைக்க வேண்டாம். மதமென கலந்த குழந்தைகள் நாங்கள். தமிழ்நாட்டை வஞ்சித்தால் முதல் ஆளாக முஸ்லிம் மக்கள் கழகம் போராட்டத்தில் ஈடுபடும்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். பாரதியின் வரிகளை போன்று எங்கள் (தமிழ்நாட்டில்) தாய் வீட்டில் குடும்பத் தகராறு இருக்கலாம்.
அதற்காக எங்களிடம் கப்பத்தை வாங்கிக் கொண்டு எங்களிடமே வருமானத்தை ஏற்கும் நிலையில் நீங்கள் இருந்தால் இந்திய ஜனநாயக குடியுரிமை பெற்ற முதல் ஆளாக முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் நிர்வாகிகள் கடும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தாய்த் தமிழ்நாட்டில் மக்களின் குரலுக்காக பாரத பிரதமர் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் என்று
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.