திண்டுக்கல் தாடிக்கொம்பு பேரூராட்சியில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு பேரூராட்சியில் அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி!
       திண்டுக்கல், பிப். 28-
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், தாடிக்கொம்பு தேர்வுநிலை பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
        தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்,  முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவ திட்டம், காலை உணவுத்திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண்' திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள "விடியல் பயணத் திட்டம்", அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் "தமிழ்ப்புதல்வன் திட்டம்", படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 'மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்", ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும் "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்", உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.
       மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ,  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் , மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆகியோர் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.       
       இப்பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை தாடிக்கொம்பு தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கவிதா சின்னதம்பி, தாடிக்கொம்பு தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பானு ஜெயராணி, தாடிக்கொம்பு தேர்வுநிலை பேரூராட்சி கழகச் செயலாளர் ராமலிங்கசாமி உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.