பெரியகுளம் நகராட்சியில் தெருவோர வியாபாரிகளுக்கான தள்ளுவண்டி 10000 பெற்றுக்கொண்டு வழங்கி உள்ளதாக பாஜகவினர் குற்றச்சாட்டு - தர்ணா போராட்டம்
தேனி , ஜன.31 - தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஒரு சில நாட்களுக்கு முன்பு நகராட்சி வளாகத்தில் பெரியகுளம் தெருவோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இதில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்து 427 தெருவோர வியாபாரிகளை கண்டறிந்து அதில் 96 தெருவோர வியாபாரிகள் தேர்ந்தெடுத்து முதற்கட்டமாக 52 தெருவோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கப்பட்டது. இது மத்திய அரசின் தீன்தயாள் உபாத்யாய யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது .
ஆனால் தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட தள்ளு வண்டிகளில் பாரத பிரதமரின் புகைப்படம் இடம்பெறாமல் தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் படம் இடம்பெற்று இருந்ததாக கூறி பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பெரியகுளம் நகராட்சி மற்றும் நகராட்சி கூட்ட அரங்கில் இதுவரை பாரத பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தும்,மேலும் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் ஒரு மதத்தினர் தங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி தரவேண்டும் என்ற கோரிக்கையை ஒரு சில நகர்மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முற்பட்டதை கண்டித்தும், பெரியகுளம் பொது மயானத்தை கண்டிப்பாக ஒரு மதத்தினருக்கு தனியாக வழங்கக் கூடாது , தெருவோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி வழங்கியதில் நகர்மன்ற உறுப்பினர்கள் 10,000 பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு வழங்கி உள்ளனர் என்று கூறி பெரியகுளம் நகராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியினர் பெரியகுளம் நகராட்சி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினரும் நகராட்சி ஆணையாளர் புனிதனும் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் கோரிக்கை மனுவை நகராட்சி ஆணையாளர் புனிதன் மற்றும் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமாரிடம் வழங்கினர்.
மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி கூட்ட அரங்கிலும் பாரத பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை என்றால் பெரியகுளம் பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் தெரிவித்தார்.இதில் 50-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Comments
Post a Comment