திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஏரிகுளத்தில் 4 குடிசை வீடுகள் எரிந்து சேதமான பகுதியை அதிமுக எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டார் .
தொட்டியம்,அக்டோபர் - 24 -திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் ஏரிகுளத்தில் நேற்று முன்தினம் குடிசைவீட்டில் சமையல் செய்யும் பொழுது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்ப்பட்டது இதில் அந்த பகுதியை சேர்ந்த அங்கம்மாள், மணோன்மனி, ஜெயலட்சுமி, கோவிந்தராஜ், ஆகிய 4 பேரின் வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது இதில் 2 ஆடுகள் இறந்தன இதில் வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதாரம் இன்றி தீயை அனைத்தனர் தீ பற்றி அந்த பகுதியை அதிமுக முசிறி சட்டமன்ற தொகுதி உறுப்னர் M. செல்வராசு M.L.A அவர்கள் நேரில் சென்று ஆடு மற்றும் வீடுகளை இழந்த குடும்பத்திற்க்கு ஆருதல் தெரிவித்து நிவாரணம், அரிசி காய்கரி , மள்ளிகை பொருட்கள் ஆகியவை வழங்கினார். உடன் மாவட்ட கவுன்சிலர் T. ரவிச்சந்திரன் B.sc.,அவர்கள், பேரூர் கழக செயலாளர் M.A. திருஞானம், ஒன்றிய செயலாளர் பால்மணி (எ) சுப்பிரமணி , ஒன்றிய கவுன்சிலர் பிருந்தா செல்வராஜ், மற்றும் அதிமுக உறுப்பினர்கள் பலரும் சென்று வீடுகளை இழந்தவர்களுக்கு ஆருதல் கூரினார்கள்.
Comments
Post a Comment