திருவள்ளூர் மாவட்டம்
திருமுல்லைவாயலில் இன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திமுக தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருமுல்லைவாயில் பகுதிக்கு உட்பட்ட 9,10,11,14 ஆகிய வார்டுகளில் உள்ள வட்ட கழக செயலாளர் மற்றும் வார்டு நிர்வாகிகள், இளைஞர் அணி அவசர ஆலோசனை கூட்டத்தில்...
திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் அவர்கள் கலந்து கொண்டு...
முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர் அவர்களின் நினைவு நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும், ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசனை கூறினார்.
இந்த கூட்டத்தில் ஆவடி மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் மாநகர அவைத்தலைவர் இரா.ருக்கு.பேபி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்...
Comments
Post a Comment