தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது

தேனி, ஜூலை 28 :இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லத்தையும், சுதந்திர போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணு, எழுத்தாளர் சுந்தரவள்ளி அவர்களையும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக விமர்சித்த சங்பரிவார் உள்ளிட்ட சமூகவிரோதிகள் மீதும் விஸ்வா.எஸ், கோபி கண்ணன் என்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று  காலை 11.00 மணியளவில் தேனி ஒன்றிய தலைவர் த.வீரையா தலைமையில், மாவட்ட துணைத் தலைவர் க.அய்யனார் முன்னிலையில் தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தோழர்கள் திரளாக கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர்.

 

Comments