கரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி ஊரக வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி ஊரக வேலை திட்டத்தில் 55 வயதுக்கு மேலான தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரம் இன்றி திண்டாடி வரும் அவர்களுக்கு வேலைக்கான ஊதியத்தை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொழிலாளர் சங்கம் சார்பாக குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதில் தலைவர் கண்ணன், செயலாளர் மலைவிளையாசி, பொருளாளர் கிறிசாந்துமேரி, குமரேசன், லெட்சுமி, திருச்சிற்றிற்பலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்