ஆசிரியர்கள் வீடியோ காலில், அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் பாடம் எடுக்கின்றனர். வகுப்பு முடியும்போது வீட்டு பாடத்தை செய்து விட்டு நாளை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். இது மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இந்த புதுவிதமான வகுப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர்.
ஆனாலும் இந்த கல்வி முறை வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டும்தான் சரியாக இருக்கும். ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு இது பொருந்தாது என்றும், வளர்ந்த நாடுகளுக்கு மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் சாத்தியப்படும் என்றும், தமிழக மாணவர்கள் படிப்போடு ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள். எனவே நமது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நேரடி வழிகாட்டல் அவசியம். எனவே நமக்கு ஆன்லைன் வகுப்புகள் ஒத்து வராது என்றும் பல்வேறு கருத்துகள் நிலவுகிறது. ஆனாலும் கொரோனாவால் ஆன்லைன் வகுப்புகள் தற்போது தவிர்க்க முடியாததாகி விட்டது. அது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு ஏன்? எதிர்ப்பு எழுகிறது என்பது பற்றிய விவரங்களை பார்ப்போம்.
Comments
Post a Comment