மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன.
கல்வியானது நாளுக்கு நாள் மாற்றங்களை கண்டு வருகிறது. அதாவது பழங்காலத்தில் குருகுல கல்வி வழக்கத்தில் இருந்தது. கால மாற்றத்தால் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., சமச்சீர் கல்வி என நாளுக்கு நாள் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆன்லைன் கல்வி முறை வந்துள்ளது.
ஏப்ரல், மே மாதங்களில் மூடப்பட வேண்டிய பள்ளிக்கூடங்கள், முன்கூட்டியே மார்ச் மாத இறுதியிலேயே மூடப்பட்டு விட்டன. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அனைத்து பள்ளிகளும் அறிவித்துள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு தேர்வை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முனைப்போடு மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
Comments
Post a Comment