கடந்த கல்வி ஆண்டு முடிவடைந்து விட்டது. கொரோனாவால் இந்த கல்வி ஆண்டில் இன்னமும் வகுப்புகள் தொடங்கப்படவில்லை. ஆனாலும் மாணவ- மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வந்துள்ளன. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்கி விட்டது. இதற்கு அரசும் பச்சை கொடி காட்டி விட்டது.
அந்த வகையில் குமரி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. காலையில் வழக்கமாக பள்ளிக்கு செல்வது போன்று மாணவ- மாணவிகள் குளித்து முடித்து சீருடை அணிந்து தனது வீட்டிலேயே செல்போன் அல்லது லேப்-டாப் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்கின்றனர்.
Comments
Post a Comment