இன்னும் ஏராளமான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடுமுறையில் நேரத்தை வீணாக்குவதற்கு பதில் இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்று கூறினாலும், இன்னும் லேப்- டாப், ஆன்ட்ராய்டு செல்போன்கள் இல்லாத வீடுகள் எத்தனையோ உள்ளன. அவர்களுக்கு எல்லாம் இந்த ஆன்லைன் வகுப்புகள் எட்டாக்கனிதான் என்றும் பெற்றோர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகாரி
இதுபற்றி கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 130 அரசு பள்ளிகள் உள்ளன. 133 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 204 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 10 முதல் 15 அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை தற்போதும் தொடர்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டால் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். அதிலும் தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே அரசு உத்தரவிட்டால் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும்“ என்றார்.
Comments
Post a Comment