ஏழை மாணவர்கள்



ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஆசிரியை தேவி:- ஆன்லைன் வகுப்பு என்பது நல்ல திட்டம் தான். இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடத்தின் மீதான கவனம் குறைவாக உள்ளது. ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட்டுக்கொண்டே பாடம் கவனிக்கின்றனர். நேரில் பாடம் எடுத்தாலே சில மாணவர்கள் கவனிக்க மாட்டார்கள். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாடங்களை கவனிப்பது இல்லை. வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதாவது கற்றுக்கொண்டால் நல்லதுதான். ஏழை மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஏனெனில் ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் அல்லது லேப்டாப் அவசியமாகிறது. பல ஏழை குடும்பங்களில் இன்னமும் செல்போன், லேப்டாப் அறியாத பொருளாகவே உள்ளது. எனவே ஆன்லைன் வகுப்புகளால் ஏழை மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை.

Comments